முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மருத்துவர் பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருத்துவர் பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Updated On : 23 செப்டம்பர் 2022, 3:10 pm IST
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் மருத்துவர் பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி கிராமத்தில் ரூ.1,50,00,000 செலவில் புதிய மருத்துவக் கட்டடங்கள் திறந்து வைப்பதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது:

எந்தெந்த பகுதியில் 3 பேருக்கு அதிகமான நபர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதோ அந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முதல் நடத்தப்பட்டு வருகிறது. பருவகால மாற்றங்களிலால் வரும் இந்த காய்ச்சலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

காய்ச்சல் ஏற்படுபவர்கள் 3 அல்லது 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது. எச்1 ஏ1 காய்ச்சல் உள்ளவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.  ஏனென்றால் நீர்த்திவளைகள் மூலம் பரவும் வாய்ப்பு அதிகம்.

இந்த மாதம் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம் என்ற மத்திய அரசின் அறிவிப்பின்படி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த 4,308 காலி பணியிடங்கள் உள்ளன. அவை அனைத்தும் 2 மாதத்திற்குள் முழுமையாக நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments