முகப்பு
தமிழ்நாடு

உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரத்தை அனுப்ப உத்தரவு

உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரத்தை அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
கோப்புப்படம்
பகிர்:

உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரத்தை அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

2021-22-ம் கல்வியாண்டில் +2 வகுப்பு முடித்த மாணவர்கள் இவ்வாண்டு உயர்கல்வி தொடர்ந்துள்ளனரா என்பதை அறிந்திட பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள், உயர்கல்வி தொடராததற்கான காரணத்தை கண்டறிந்து வழகாட்டுதல்கள் வழங்கவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களை தனித்தனியாக தொடர்புகொண்டு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் .

மேலும், ஆலோசனைகளை மாநில திட்ட இயக்கத்தில் இருந்து வழங்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறை பெறப்பட்ட 79,762 மாணவர்களின் விவரங்களில் 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கைவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.