தொல்.திருமாவளவன். 
தமிழ்நாடு

ஆா்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கக் கூடாது: தொல்.திருமாவளவன்

ஆா்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

DIN

ஆா்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அக். 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்கப் பேரணி நடைபெறவுள்ளது. இந்த பேரணி நடைபெறும் இடங்களில் உரிய பாதுகாப்பு, அனுமதி வழங்கக் கோரி அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபுவை ஞாயிற்றுக்கிழமை டிஜிபி அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அக். 2ஆம் தேதி, அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்து சமூக நல்லிணக்க பேரணியை நடத்த உள்ளோம். தமிழகத்தை ஜாதி, மதத்தின் பெயரால், வன்முறையை தூண்டுவதற்கு கும்பல் ஒன்று சதி திட்டம் தீட்டி வருகிறது. அக். 2-ஆம் தேதி காந்தி பிறந்த நாளன்று ஆா்.எஸ்.எஸ். தமிழகத்தில் பேரணி நடத்துவதற்கான தேவை என்ன? ஆகையால், அந்த பேரணிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. பேரணிக்கு அனுமதி அளிப்பதன் மூலம், அது வன்முறைக்கு வழி வகுத்ததாகிவிடும்.

தமிழகத்தில் நிகழும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் ஏற்கத்தக்கவை அல்ல. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் திமுக அரசை கலைத்துவிட்டு தோ்தலைச் சந்திக்க வேண்டும் என்று பாஜக கணக்கு போடுகிறது. பாஜகவுக்கு உரிய நேரத்தில் மக்கள் பாடம் கற்பிப்பா்’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT