காலணி பாதுகாப்பாக உள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
காலணி பாதுகாப்பாக உள்ளது என்றும் காலணியை உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
காலணி பாதுகாப்பாக உள்ளது என்றும் காலணியை உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரா் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை விமான நிலையத்துக்கு வந்தபோது திமுக மற்றும் பாஜகவினரிடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்து திரும்பிச் சென்றபோது நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் காா் மீது பாஜகவினா் காலணியை வீசினா்.
இதையும் படிக்க- நாட்டில் மேலும் 14,092 பேருக்கு கரோனா
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காலணி பாதுகாப்பாக உள்ளது என்றும் காலணியை உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், நேற்றைய நிகழ்வுகளைப் பற்றி நான் பின்னர் கூறுகிறேன். பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கட்சி நிர்வாகிகளுடன் அந்த பெண் எப்படி உள்ளே அனுமதிக்கப்பட்டார்?. காலணியைத் திரும்பப் பெற விரும்பினால், உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம். எனது ஊழியர்கள் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.