முகப்பு
தமிழ்நாடு

ஓபிஎஸ் வீட்டின் முன்பாக திரண்ட தொண்டர்கள்!

அதிமுக பொதுக்குழு விவகார வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளதை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பாக அவரது ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். 

Updated On : 17 ஆகஸ்ட் 2022, 11:36 am IST
பகிர்:

அதிமுக பொதுக்குழு விவகார வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளதை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பாக அவரது ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். 

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. 

விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். 

Advertisement

இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளிக்க உள்ளார். 

இதையடுத்து சென்னையில் உள்ள ஓபிஎஸ் வீட்டின் முன்பாக அவரது ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். 

முன்னதாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.