கொடநாடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
கொடநாடு வழக்கு விசாரணை செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு வழக்கு விசாரணை செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரனை மேற்கொள்ளப்பட்டது.
கொடநாடு வழக்கில் கனகராஜின் செல்போன் பதிவுகள், தகவல் பரிமாற்றங்களை சேகரிக்க டிராய் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. தகவல்களை சேகரிக்க டிராயின் அனுமதி கேட்ட நிலையில் ஒத்துழைப்பு அளிக்கப்படாமல் உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
Advertisement
Advertisement
குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ள 10 பேரில் சயான், வாளையார் மனோஜ், உதயன், ஜித்தின்ஜாய் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 303 பேரிடம் தனிப்படை காவல் துறை விசாரணை நடத்தி உள்ளது.
இதையும் படிக்க:
இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற ஒத்திவைத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.