சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சாதி குறித்த கேள்வி: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வில் சாதி குறித்த கேள்வி இடம் பெற்றதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வில் சாதி குறித்த கேள்வி இடம் பெற்றதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாகி உள்ளது. முதுகலை வரலாறு 2-ம் ஆண்டு தேர்வு வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி? என கேள்வி இடம் பெற்றுள்ளது. இந்த கேள்வி கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
இதையும் படிக்க- சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசாணை: வைகோ வரவேற்பு
Advertisement
Advertisement
இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வில் சாதி குறித்த கேள்வி இடம் பெற்றதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை முதலாம் ஆண்டு வரலாறு பருவத் தேர்வில் சாதி குறித்து வினா கேட்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் அவர்கள் அளித்திருக்கும் விளக்கமும் ஏற்புடையதாக அல்ல.
எனவே, தமிழ்நாடு அரசு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கும் வகையில், நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அஇஅதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.