முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வருகிற அக்டோபரில் மத்திய அரசுடன் இணைந்து சென்னையில் உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Updated On : 29 ஜூலை 2022, 3:06 pm IST
பகிர்:

வருகிற அக்டோபரில் மத்திய அரசுடன் இணைந்து சென்னையில் உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பதிவில், 'தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கணக்குப்படி இந்தியாவில் உள்ள 264 புலிகளில் சுமார் 10 சதவிகித புலிகள் தமிழ்நாட்டில்தான் உள்ளது.

புலிகள் பாதுகாப்பில் தமிழகத்தின் முன்னோடி முயற்சிகளுக்குப் பொருத்தமாக 2022 அக்டோபர் மாதம் சென்னையில் மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசால், உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று தெரிவித்தார். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.