முகப்பு
தமிழ்நாடு

காங்கிரஸ் அலுவலகத்தில் மோதல்: காவலர்கள் குவிப்பு

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 15 நவம்பர், 2022 at 8:30 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவுவதால் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இரு தரப்பினர்  உருட்டைக் கட்டையால் தாக்கிக் கொண்டதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகியை மாற்றக்கோரி சத்தியமூர்த்தி பவனில் இரு தரப்பினர் மோதல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில்  சத்தியமூர்த்தி பவனில் பதற்றம் நிலவுவதால், காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.