'எதிர்க்கட்சி யார் என்பது மக்களுக்கு தெரியும்': முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
எதிர்க்கட்சி யார் என்பது மக்களுக்கு தெரியும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி யார் என்பது மக்களுக்கு தெரியும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது:
மழைநீர் வடிகால் பணிகள் விரைவாக நடைபெறுகிறது. ஆனால் தரமான வகையில் அந்த பணிகள் நடைபெற வேண்டும். மழைநீர் வடிகால் விவகாரம் திமுக அரசுக்கு ஒரு பிரச்னையாக இருக்கும்.
Advertisement
Advertisement
ஒபிஎஸ் அதிமுக கட்சியிலேயே இல்லை. எனவே சட்டப்பேரவையில் அவருக்கு இடம் அளிக்கக் கூடாது. இது தொடர்பாக சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து உள்ளோம். சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு இடம் ஒதுக்கினால் சபாநாயகர் அவரது மரபை மீறியதாக இருக்கும். திமுக மக்களிடம் செல்வாக்கை இழந்துவிட்டது.
அமமுக உடன் அதிமுக என்றும் கூட்டணி வைக்காது. வேண்டுமானால் பன்னீர் செல்வம் மற்றும் சசிகலாவுடன் அமமுக கூட்டணி வைத்துக் கொள்ளட்டும். பாஜக தான் உண்மையான எதிர்க்கட்சி என்று அண்ணாமலை கூறிகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், எதிர்க்கட்சி யார் என்பது மக்களுக்கு தெரியும் என்று கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.