முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் கடிதங்கள் நூல்களாக வெளியீடு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் கடிதங்கள் நூல்களாக தொகுக்கப்பட்டு, திமுக முப்பெரும் விழாவில் வெளியிடப்பட உள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் கடிதங்கள் நூல்களாக தொகுக்கப்பட்டு, திமுக முப்பெரும் விழாவில் வெளியிடப்பட உள்ளன.

திமுக தலைவராகவும், முதல்வராகவும் இருந்த கருணாநிதி, கட்சியினருக்கு, எழுதிய ஆயிரக்கணக்கான கடிதங்கள் நூல் வடிவம் பெற்றுள்ளன. மொத்தமாக 4 ஆயிரத்து 41 கடிதங்கள் அடங்கிய கடிதங்கள் 54 தொகுதிகளாக தயாராகியுள்ளன. விருதுநகா் மாவட்டத்தில் வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவின் போது நூலை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளாா். திமுக பொதுச் செயலாளரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் நூலைப் பெற்றுக் கொள்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.