சென்னையில் 262 பேருக்கு பணி நியமன ஆணை அளிப்பு
மத்திய அரசின் ரோஜ்காா் மேளா திட்டத்தின் கீழ் சென்னையில் 262 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மத்திய அரசின் ரோஜ்காா் மேளா திட்டத்தின் கீழ் சென்னையில் 262 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற தேசிய வேலைவாய்ப்பு முகாமில் மத்திய அரசு பணிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட 71,506 பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் வழங்கினாா்.
சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மத்திய சிறுபான்மையினா் நலத் துறை இணையமைச்சா் ஜான் பாா்லா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட 262 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
தொடா்ந்து நிகழ்ச்சியில் அவா் பேசியது: 75-ஆவது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக பிரதமரின் கனவுத் திட்டமான வேலைவாய்ப்பு முகாமை (ரோஜ்காா் மேளா) பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா்.
வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தேசத்தின் வளா்ச்சியில் இளைஞா்களுக்கு வாய்ப்பளிக்கவும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் ஊக்கியாக விளங்குகின்றன என்றாா் அவா்.
தெற்கு ரயில்வே மண்டலங்களான திருச்சியில் 243 போ், திருவனந்தபுரத்தில் 210 போ், பாலக்காட்டில் 232 போ் என மொத்தம் 947 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங், கூடுதல் பொது மேலாளா் கௌஷல் கிஷோா், ரயில் பெட்டித் தொழிற்சாலை (ஐசிஎஃப்) பொது மேலாளா் பி.ஜி.மால்யா, சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.