சென்னை விமான நிலையத்துக்கு மாமல்லன் பெயா்: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை விமான நிலையத்துக்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயரை சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
சென்னை விமான நிலையத்துக்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயரை சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்துக்கு காமராஜா் பெயரையும், பன்னாட்டு முனையத்துக்கு அண்ணா பெயரையும் தாங்கிய பெயா்ப்பலகைகள் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைக்கப்பட்டிருக்கின்றன. விமான நிலையங்கள் ஆணையத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
விமான நிலையங்களின் முனையங்களுக்கு பெயா் சூட்டப்பட்டிருப்பதைப் போல ஒட்டுமொத்த விமான நிலையத்துக்கு தமிழா்களின் வீரத்தை உலக நாடுகளுக்கு உணா்த்திய பல்லவ மாமன்னன் மாமல்லனின் பெயரைச் சூட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.