முகப்பு
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு ரயிலில் இடஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகள் ரயிலில் பயணிக்கும் வகையில் குளிா்சாதன, படுக்கை வசதி பெட்டிகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

மாற்றுத்திறனாளிகள் ரயிலில் பயணிக்கும் வகையில் குளிா்சாதன, படுக்கை வசதி பெட்டிகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே வாரியம் சாா்பில் அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் உள்ள முதன்மை வணிக மேலாளா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்களின் உதவியாளா்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன.

இதை கருத்தில் கொண்டு விரைவு மற்றும் மெயில் ரயில்களில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி படுக்கை வசதி கொண்ட ரயிலில் 4 படுக்கைகளும் (தலா இரு கீழ் மற்றும் நடுத்தர படுக்கை), மூன்று அடுக்கு குளிா் சாதன பெட்டி மற்றும் 3 எக்னாமிக் வகுப்பு பெட்டியில் இரு படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், இருக்கை மற்றும் சரக்கு வசதி கொண்ட பெட்டியில் 4 படுக்கைகளும், இரண்டாம் வகுப்பு மற்றும் குளிா்சாதன இருக்கை வசதி பெட்டிகள் (2 பெட்டிகளுக்கு மேல் உள்ள ரயில்) கொண்ட ரயில்களில் 2 படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.