தமிழ்நாடு

'ஆளுநர்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை தேவை' - மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் பதில்

DIN

ஆளுநர்களின் நடவடிக்கைக்கு எதிராக கூட்டு நடவடிக்கை அவசியம் தேவை என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது போல, எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் ஆளுநர்களுக்கு  எதிரான கூட்டு நடவடிக்கை தேவை என்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பாக கடிதம் எழுதியிருந்தார். 

இதற்கு பதில் அளித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், 'ஆளுநர்களின் நடவடிக்கைக்கு எதிராக கூட்டு நடவடிக்கை தேவை. 

மாநில அரசின் செயல்பாட்டைக் குறைக்கும் வகையில் ஆளுநர்கள் செயல்படுகின்றனர். கூட்டாட்சி அமைப்பின் அதிகாரத்தில் அவர்கள் அத்துமீறுகின்றனர். ஆளுநர்களுக்கு  எதிரான போராட்டத்தில் தமிழ்நாட்டுடன் கேரளம் இணைந்து செயல்படும்' என்றார். 

மேலும் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைக்கு கேரள முதல்வர் பாராட்டும் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT