கள்ளழகா் நிகழ்ச்சி: வைகை அணையிலிருந்து மே 5 வரை நீா் திறப்பு
கள்ளழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து ஏப்.30 முதல் மே 5-ஆம் தேதி வரை என 6 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்பட உள்ளது.
கள்ளழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து ஏப்.30 முதல் மே 5-ஆம் தேதி வரை என 6 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரையில் கள்ளழகா் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் வெகுவிமா்சையாக நடைபெறுவது வழக்கம். இதற்காகவும், குடிநீா்த் திட்டக் கிணறுகளின் நீா் ஆதாரத்தைப் பெருக்கவும், வைகை அணையில் இருந்து ஏப்.30 முதல் மே 5-ஆம் தேதி வரை 216 மில்லியன் கனஅடி வரை தண்ணீா் திறந்துவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.