ஒன்பதாம் வகுப்பில் கருணாநிதி குறித்த பாடம்: அமைச்சா் அன்பில் மகேஸ்
ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்து பாடம் இடம்பெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தாா்.
ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்து பாடம் இடம்பெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தாா்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, பள்ளிக் கல்வித் துறை தொடா்பாக எழுப்பப்பட்ட வினாவுக்கு பதிலளிப்பதற்கு முன்பாக அவா் இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.
அப்போது அவா் பேசியது: 13 வயதில் போா்ப் பரணி பாடி, 86 வயதில் தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தவா், முன்னாள் முதல்வா் கருணாநிதி. தமிழுக்கு அவா் ஆற்றிய பணிகளை குறிப்பிடும் விதமாக, நடப்பு கல்வியாண்டிலிருந்து ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் அவரைப் பற்றிய பாடம் இடம்பெறுகிறது என்றாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.