மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: நிதியுதவி அறிவிப்பு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பலியான இளம்பெண்ணின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

DIN

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பலியான இளம்பெண்ணின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கங்கரகோட்டை வருவாய் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா (வயது 24) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! ரூ. 5,980 கோடி முதலீட்டில் 8,400 பேருக்கு வேலைவாய்ப்பு!

ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!

'பெண் என்பதால்...' - கரூர் பாஜக தலைவரின் ஆபாசப் பேச்சுக்கு ஜோதிமணி கடும் கண்டனம்!

"Trisha விவகாரத்தில் வருத்தம் தெரிவிக்கிறேன்!" நயினார் நாகேந்திரன் பேட்டி | Vijay | TVK | BJP

இரண்டு நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட இந்திய பங்குச் சந்தை!

SCROLL FOR NEXT