தூத்துக்குடி துறைமுகத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள பிரதமர், சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய உன்னதமான தொலைநோக்குடன் கூடிய முயற்சிக்கு தூத்துக்குடி துறைமுகத்துக்கு வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2022-ல் உலக பூமி நாளையொட்டி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நேற்று உலக பூமி நாள் கொண்டாடப்பட்ட நிலையில், மரங்கள் குறித்த விடியோவை பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.