முகப்பு
தமிழ்நாடு

பழனியில் அடுத்த 2 நாள்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது

பழனி மலைக்கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக அடுத்த இரண்டு நாள்களுக்கு நிறுத்தப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:51 PM
பகிர்:

பழனி மலைக்கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக அடுத்த இரண்டு நாள்களுக்கு நிறுத்தப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப்பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது.

காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப்காா் பிற்பகல் ஒரு மணி நேரமும், மாதத்தில் 2 நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் ரோப்காா் நிறுத்தப்படுவதாக திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, பக்தா்கள் மின் இழுவை ரயில், படிப்பாதையைப் பயன்படுத்தி மலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments