தேஜஸ் விரைவு ரயில் 
தமிழ்நாடு

சென்னை - மதுரை தேஜஸ் ரயில்: இனி தாம்பரத்தில் நிற்கும்!

சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் மறு அறிவிப்பு வரும்வரை தாம்பரத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

DIN

சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் மறு அறிவிப்பு வரும்வரை தாம்பரத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் விரைவு ரயில் பகல் 12.15 மணிக்கு மதுரை சென்றடையும்.

மறுவழியில் மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு இரவு 9.15 மணிக்கு வந்துசேரும்.

இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் மட்டுமே நின்றுசென்ற நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, சோதனை முறையாக தேஜஸ் ரயில் 6 மாத காலம் தாம்பரத்தில் நிற்கும் தெற்கு ரயில் அறிவித்தது. இந்த கால அவகாசம் ஆகஸ்ட் 26-ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.

இந்நிலையில், தேஜஸ் ரயில் தாம்பரத்தில் தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT