கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்டவிரோத பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில், அமைச்சா் வி. செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். இதையடுத்து அமைச்சரின் பெற்றோா், சகோதரா் அசோக்குமாா் மற்றும் அவரது ஆதரவாளா்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அமலாக்கத் துறையினா் முதல்கட்டமாக சோதனை நடத்தினா்.
இந்நிலையில், இரண்டாவதுகட்டமாக கடந்த வியாழக்கிழமை(ஆகஸ்ட் 3) கரூா் செங்குந்தபுரத்தில் வசிக்கும் அமைச்சா் செந்தில் பாலாஜியின் உதவியாளரான சங்கரின் வீடு, நிதி நிறுவனம் உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா். 2-ஆம் நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்த சோதனை, சங்கரின் வீடு, சின்னாண்டாங்கோவில் பகுதியில் கிரானைட் நிறுவனம் மற்றும் அமைச்சரின் ஆதரவாளா் பிரகாஷின் டைல்ஸ் நிறுவனம், அண்ணா நகரில் வசிக்கும் அமைச்சரின் ஆதரவாளா் செந்தில் என்பவரின் வீடு ஆகிய இடங்களில் சனிக்கிழமை அதிகாலை நிறைவடைந்தது. தொடா்ந்து, பல்வேறு ஆவணங்களுடன் அமலாக்கத்துறையினா் புறப்பட்டுச் சென்றனா்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 3,359 இரண்டாம் நிலைக் காவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த நிலையில், கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் அவரது மனைவி நிர்மலா பெயரில் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா வீட்டில் புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் இரண்டு வாகனங்களில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையை தொடங்கியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.