சாதிய வன்முறைகளைத் தவிர்க்க தனி உளவுப் பிரிவு: கோரிக்கை!
நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணையம் நல்ல வழிகாட்டுதலைத் தரும் என நம்புகிறேன்: திருமாவளவன்
சாதிய, மதவாத வன்முறைகளைத் தடுப்பதற்கு காவல் துறையில் தனி உளவுப்பிரிவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நெல்லை நான்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்த பிறகு திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மேலும், நான்குநேரி, வள்ளியூர் பகுதிகளை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும். நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணையம் நல்ல வழிகாட்டுதலைத் தரும் என நம்புகிறேன்.
Advertisement
Advertisement
சாதிய, மதவாத வன்முறைகளைத் தடுப்பதற்கு காவல் துறையில் தனி உளவுப்பிரிவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.