சமூக நலப் பணிகளை ஆற்றி வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் புரிந்து வரும் ராஜேந்திரனை பாராட்டி நினைவு பரிசு வழங்கிய முதல்வர் மு. க. ஸ்டாலின். 
தமிழ்நாடு

மதுரை கொடையாளருக்கு முதல்வர் பாராட்டு!

மதுரை தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் புரிந்து வரும் ராஜேந்திரனை அழைத்து வாழ்த்துகளை தெரிவித்து, அவருக்கு கருணாநிதி திருவுருச்சிலையை வழங்கி பாராட்டினார் முதல்வர் மு. க. ஸ்டாலின். 

DIN

மதுரை: மதுரையில் பல்வேறு சமூக நலப் பணிகளை ஆற்றி வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் புரிந்து வரும் ராஜேந்திரனை அழைத்து வாழ்த்துகளை தெரிவித்த முதல்வர் மு. க. ஸ்டாலின், அவருக்கு கருணாநிதி திருவுருச்சிலையை வழங்கி பாராட்டினார். 

மதுரையில் கல்வி மேம்பாட்டுப் பணிகளுக்கு பெரிய அளவில் கொடை அளித்து வரும் தத்தனேரியை சேர்ந்த வத்தல் வியாபாரி ராஜேந்திரன்.

இவர், மதுரை திரு.வி.க மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றின் கட்டுமான மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.1 கோடியும், கைலாசபுரம் தொடக்கப் பள்ளியில் 4 வகுப்பறைகள், உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் மற்றும் ஒரு ஆழ்துளை கிணறு போடும் பணிகளுக்கு ரூ. 75 லட்சத்து 45 ஆயிரம் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், மதுரையில் வியாழக்கிழமை காலை ராஜேந்திரனை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது சமூக நலப் பணிகளை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து, சால்வை அணிவித்து, அவருக்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி திருவுருவச் சிலையை நினைவு பரிசாக வழங்கி பாராட்டினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

SCROLL FOR NEXT