தமிழ்நாடு

மூன்றாம் பாலினத்தவர்களை வேறுபடுத்தி பார்க்கக்கூடாது!

சமூகத்தில் நாம் அனைவரும் சமமானவர்கள் என்பதை உணர வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்களை வேறுபடுத்தி பார்ப்பது சமூகத்தில் வேற்றுமை ஏற்படுவதை காண்பிக்கிறது: உயர்நீதிமன்றம்

DIN


மூன்றாம் பாலினத்தவர்களை வேறுபடுத்தி பார்ப்பது சமூகத்தில் வேற்றுமை ஏற்படுவதை காண்பிக்கிறது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம் நைனார்குப்பத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு பட்டா வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு இன்று (ஆக. 21) விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, சமூகத்தில் மூன்றாவது பாலினத்தவர்கள் மீது வெறுப்பு காட்டுவது வேதனை அளிக்கிறது.

சமூகத்தில் நாம் அனைவரும் சமமானவர்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்களை வேறுபடுத்தி பார்ப்பது சமூகத்தில் வேற்றுமை ஏற்படுவதை வெளிப்படையாக காண்பிக்கிறது எனக் குறிப்பிட்டார். 

மேலும், மூன்றாம்ம் பாலினத்தவர்களுக்கு எதிரான நிகழ்வுகள், சமூகத்தில் சத்தமில்லாமல் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X தளத்தில் Comment Off “கருத்து சுதந்திரம் பற்றி திருமா பேசுகிறார்!” அண்ணாமலை விமர்சனம்

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT