திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரோந்து பணியின் போது ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை ஞாயிற்றுக்கிழமை (ஆக 27) நேரில் வழங்கினார்.
திருச்சி மாநகர், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் (வயது 45) கடந்த 30-7-2023 அன்று அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் ஒன்று மோதியதில் காயமுற்று அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சனிக்கிழமை அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தலைமைக் காவலர் ஸ்ரீதர் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படிக்க | காட்டுமன்னார்கோவில் அருகே 6 உலோக சிலைகள் கண்டெடுப்பு
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் “கள ஆய்வில் முதல்வர்” திட்டத்தின் கீழ், ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பும் வழியில், ஞாயிற்றுக்கிழமை (ஆக 27) திருச்சி விமான நிலையத்தில், ரூ. 25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை மறைந்த தலைமைக் காவலர் ஸ்ரீதர் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.
இந்த நிகழ்வின்போது, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எம். பிரதீப்குமார், மாநகர காவல் துறை ஆணையர் என். காமினி ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.