தமிழ்நாடு

காவிரியில் 24,000 கனஅடி தண்ணீர் திறக்க வலியுத்தப்படும்: அமைச்சா் துரைமுருகன்

DIN


காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 

தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23ஆவது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்திற்கு உடனடியாக 5 ஆயிரம் கன அடி தண்ணீரை கா்நாடகம் திறந்துவிட வேண்டும் என காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து இன்று(ஆகஸ்ட் 29) நடைபெறும் காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு உத்தரவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர துரைமுருகன் கூறியது, 

காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்படும். வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று ஆணையது கூறியது போதாது. 

45 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட ஆணையத்தில் வலியுறுத்தப்படும். தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் கிடைத்தால் தான் நன்றாக இருக்கும். 

தமிழ்நாட்டின் கோரிக்கையை நீர்வளத்துறை செயலாளர் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளையாட்டு விடுதி மாணவா்கள் சோ்க்கைக்கு தோ்வுப் போட்டிகள்

மன நல மையத்தில் சிகிச்சை பெற்றவா் தற்கொலை

மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைவது எப்போது?

செவிலியா்களின் சேவைக்கு ஈடு இணை இல்லை

மதுரை அருகே பெண் காவல் ஆய்வாளா் வீட்டில் 450 பவுன் நகைகள் திருட்டு

SCROLL FOR NEXT