மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

சாலை விபத்தில் 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் பலி: முதல்வர் இரங்கல்

விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

DIN

சென்னை:  விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 
விருதுநகர் மாவட்டம், செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் கருப்பசாமி, கிருஷ்ணபேரி ஊராட்சி மன்றத் தலைவரான வினோதினி கணவரான அபிமன்னன், ஊரக வளர்ச்சி இயக்குநர் அவர்களைச் சந்தித்து மனு கொடுக்கச் சென்னைக்குக் காரில் சென்று கொண்டிருந்த போது, மணப்பாறை அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.

கருப்பசாமி மற்றும் அபிமன்னன் ஆகியோரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கோமதி சங்கர் (நடுவப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டிச்செல்வியின் கணவர்) உரிய சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

விபத்தில் காயமடைந்தோர் அனைவரும் விரைவில் நலம்பெற விழைகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT