முகப்பு
தமிழ்நாடு

டிச.5-ல் ஆந்திரம் அருகே புயல் கரையைக் கடக்கிறது!

வங்கக்கடலில் வலுப்பெறும் புயல் டிசம்பர் 5-ம் தேதி காலை ஆந்திரம் அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:19 PM
ஆந்திரத்தில் கரையைக் கடக்கிறது புயல்
பகிர்:


வங்கக்கடலில் வலுப்பெறும் புயல் டிசம்பர் 5-ம் தேதி காலை ஆந்திரம் அருகே  கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தெற்கு ஆந்திரம் - வடதமிழகத்திற்கு வரும் 4-ம் தேதி புயல் வந்தடைகிறது. எனவே, ஆந்திரத்தின் நெல்லூருக்கும்-மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி காலை புயல் கரையைக் கடக்கிறது. 

முன்னதாக வடதமிழகம்-மசூலிப்பட்டினத்திற்கு இடையே டிச.4-ம் தேதி மாலை கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் புயல் கரையைக் கடக்கும் இடம் மாறியுள்ளதால், கரையைக் கடக்கும் நேரமும் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. டிச.2ல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி டிச.3ல் வங்கக்கடலில் புயலாக வலுப்பெற உள்ளது. 

புயல் ஆந்திரத்தை நோக்கி செல்வதால் தமிழகத்திற்கு பாதிப்பில்லையா? என்று கேட்டால், நிச்சயம் பாதிப்புள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 5-ம் தேதி வரை கன முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →