சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத கனமழை!
சென்னையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பதிவாகியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடுசென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத கனமழை!
சென்னையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பதிவாகியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பதிவாகியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலைமுதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது.
இதன்காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான சாலைகளில் மரம் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை வரை 340 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | ’விவரிக்க வார்த்தைகள் இல்லை..’: தமிழ்நாடு வெதர்மேன்!
இது கடந்த 47 ஆண்டுகள் வரலாற்றில் பெய்யாத கனமழை ஆகும்.
இதற்கு முன்னதாக சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது பெய்த மழையின் அளவு 340 மி.மீ. என்பது குறிப்பிடத்தக்கது.