தமிழ்நாடு

பால் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

DIN

சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் வாங்குவதற்காக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  

பால் இல்லாமல் இரு நாட்களாக அவதிப்படும் சூழல் உள்ளதால், மழை குறைந்துள்ள இன்று அதிக எண்ணிக்கையிலான மக்கள் பால் வாங்கக் குவிந்தனர்.

சென்னை கொளத்தூர் அண்ணா சாலையில் ஆவின் பால் வாங்க  அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். 

வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல கடைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் மக்கள் அவதியுற்றனர். 

பால் வாங்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்

தற்போது சென்னையில் மழையளவு குறைந்துள்ளதால், அத்தியாவசிய பொருள்கள் வாங்கக் கடைகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் குவிந்துள்ளனர். 

குறிப்பாக ஆவின் நிலையங்களில் பால் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து பால் வாங்கிச் சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

SCROLL FOR NEXT