தமிழ்நாடு

பூந்தமல்லியில் 3 பள்ளிகளுக்கு விடுமுறை

DIN

பூந்தமல்லியில் உள்ள 3 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லியில் உள்ள சரோஜினி வரதப்பன் மகளிர் மற்றும் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, சின்ன போரூரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 பள்ளிகளில் வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் இன்று(டிச. 12) தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு 4.12.2023 முதல் 9.12.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு அதி கனமழைக்கான ’சிவப்பு’ எச்சரிக்கை!

சென்னை, 7 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!

காஸாவில் இனப்படுகொலை? இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்கா

விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவு!

SCROLL FOR NEXT