புயல் நிவாரணம்: இன்று முதல் டோக்கன் விநியோகம்; டிச. 17ல் முதல்வர் தொடக்கிவைக்கிறார்?
மிக்ஜம் புயல் நிவாரணத் தொகைக்கு இன்று பிற்பகல் முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிக்ஜம் புயல் நிவாரணத் தொகைக்கு இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மிக்ஜம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்த அரசாணை நேற்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகைக்கு இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | யாருக்கெல்லாம் புயல் நிவாரணம் ரூ.6,000 கிடைக்கும்? அரசாணை வெளியீடு
நிவாரணம் வழக்குவது குறித்து ரேஷன் கடை பணியாளர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் இதன் பின்னர் இன்று பிற்பகல் முதல் டோக்கன் விநியோகம் செய்யும் பணியில் கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை பணியாளர்கள் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணத் தொகை வழங்குவதை தொடக்கிவைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.