தென் மாவட்டங்களில் பெய்துவரும் அதி கனமழை அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையத் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் வெளியிட்ட தகவலில்,
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடிப்பதால் கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதிகனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக 4 மாவட்டங்களும் கிட்டத்தட்ட வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.