தமிழ்நாடு

உணவு, மருத்துவம்: அவசர உதவி எண் 80778 80779!

தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு உதவும் வகையில் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு உதவும் வகையில் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில்,

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறோம்.

மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடர்பு கொள்ளவும். உதவிட முன்வரும் தன்னார்வலர்களும் இதில் தங்களை இணைத்து கொள்ளலாம்.

தொடர்பு எண்: +91 80778 80779

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு - தேவர்குளம் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் போக்குவரத்து சேவை அந்த மார்க்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி - திருச்செந்தூர் வழித்தடத்தில் சென்ற அரசுப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியதால், பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை - மதுரை நெடுஞ்சாலையில் இருந்து கயத்தாறு செல்லும் வழியில் உள்ள பாலங்கள் நீரில் மூழ்கின. இதனால் அந்த வழித்தடத்திலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT