தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

DIN

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. முன்னதாக தென்கால் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இப்போட்டியை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த பல்வேறு தரப்பினர் மாவட்ட நிர்வாகத்தினரிடம் முறையிட்டனர். இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த,  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, எந்தவிதமான சாதி, மதத்தை புகுத்தல் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும்.

மேலும், மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும்  மாநகராட்சி இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

SCROLL FOR NEXT