வார இறுதி நாள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு பயணிகள் வசதிக்காக 640 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தினசரி இயங்கும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக டிச.22 ஆம் தேதி 350 பேருந்துகளும், டிச.23 ஆம் தேதி 290 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி, வேளாங்கண்ணி உள்ளிட்ட ஊர்களுக்கும், மற்ற ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதையும் படிக்க: டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை 2024: குரூப் 4 எப்போது?
மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.