மதுரை: மதுரையிலிருந்து புதன்கிழமை இரவு புறப்படவிருந்த மதுரை- சண்டிகர் விரைவு ரயில் 8 மணி நேரம் தாமதமாக வியாழக்கிழமை (டிச. 28) காலை புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மதுரை ரயில் நிலையத்திலிருந்து புதன்கிழமை (டிச. 27) இரவு 11.35 மணிக்குப் புறப்படவிருந்த மதுரை - சண்டீகர் விரைவு ரயில் (12687), ஏறத்தாழ 8.40 மணி நேரம் தாமதமாக வியாழக்கிழமை காலை 7.15 மணிக்குப் புறப்படும்.
இணை ரயில் வருகையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இந்த நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.