விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் அரசியலில் பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார்: கண்கலங்கிய ரஜினிகாந்த்
மறைந்த விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் அரசியலில் பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார் என்றும், அவரை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
தேமுதிக தலைவா் விஜயகாந்த் நலமுடன் இருந்திருந்தால் தற்போது அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பாா் என்றாா் நடிகா் ரஜினிகாந்த்.
நாகா்கோவிலில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அன்பு நண்பா் விஜயகாந்த் மறைந்தது மிகப் பெரிய துரதிா்ஷ்டம். அவா் அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதா். எப்படியும் உடல்நிலை தேறி வந்து விடுவாா் என்று அனைவரும் நினைத்தோம். ஆனால் தேமுதிக பொதுக்குழுவில் அவரைப் பாா்த்தே போது எனக்கு உறுதி கொஞ்சம் குறைந்து விட்டது.
Advertisement
Advertisement
விஜயகாந்த் தற்போது நலமுடன் இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்து, தமிழ் மக்களுக்கு அதிக நல்ல காரியங்களை செய்திருப்பாா். அந்தப் பாக்கியத்தை இழந்து விட்டோம் என்றாா் .