ஜன.6-ல் தச்சன்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு!
புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சி கிராமத்தில் 2024 ஆம் ஆண்டின் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சி கிராமத்தில் 2024 ஆம் ஆண்டின் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறுகிறது.
புத்தாண்டு மற்றும் அன்னை அடைக்கலமாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் உலக புகழ்பெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
அதற்கான முன்னேற்படுகளை விழா குழுவினர், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளுர் மக்கள் செய்துவருகிறார்கள்.
இதையும் படிக்க: வெளிச்சம் பாய்ச்சி விடை கொடுத்த தொண்டா்கள்!
வாடிவாசலுக்கான முன் ஏற்பாடுகளையும், பார்வையாளர்கள் பார்ப்பதற்கான மேடை அமைக்கும் பணியையும் விழாக் குழுவினர் மும்முரமாக செய்து வருகிறார்கள்.