முகப்பு
தமிழ்நாடு

முதுமலை காப்பகத்தில் புலி தாக்கி பெண் சாவு

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக் காட்டில் புலி தாக்கியதில் பெண் பலியான சம்பவம் நடந்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:23 AM
பகிர்:

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக் காட்டில் புலி தாக்கியதில் பெண் பலியான சம்பவம் நடந்துள்ளது.

வீட்டருகே உள்ள காட்டிற்கு நேற்று மாரி (50) சென்ற பெண் இரவு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இன்று காலையில் மீண்டும் தேடியுள்ளனர். புலி தாக்கி உடல் சிதைந்த நிலையில் சடலம் கிடந்துள்ளது.

இந்நிலையில் வனத் துறையும், காவல் துறையினரும் உடற்கூறு பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு சடலத்தைக் கொண்டு சென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.