தமிழ்நாடு

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது: பிப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெற விரும்புவோா் பிப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு, திருநங்கைகளின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.

இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் அரசு உதவிபெறாமல், தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும்.

குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும். திருநங்கைகள் வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

மேலும், விண்ணப்பதாரரின் சுயவிவர குறிப்பு, 2 புகைப்படங்கள், சுயசரிதை, சேவை குறித்த செயல்முறை விளக்கத்துடன் கூடிய புகைப்படம், சேவையைப் பாராட்டிய பத்திரிக்கை செய்தி தொகுப்பு, சமூகப் பணியாளா் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்றுகளை இணைக்க வேண்டும்.

இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்களை பிப்.28-ஆம் தேதிக்குள் awards.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிரந்தர கணக்கு எண்ணை உறுதி செய்ய அரசு ஊழியா்களுக்கு கருவூலத் துறை உத்தரவு

காங்கிரஸ் தொண்டா்கள் தோ்தல் பிரசாரத்தை போா்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்த வேண்டும்: தில்லி காங்கிரஸ் தலைவா்

கேதார்நாத் யாத்திரை: முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம்

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

SCROLL FOR NEXT