தமிழ்நாடு

கூடலூர் பகுதியில் வீடுகளைச் சுற்றி வலம்வரும் காட்டு யானைகளால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை வலம்வருவதால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN




கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை வலம்வருவதால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் அன்மை காலங்களாகவே காட்டு யானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது.

விவசாயிகளின் தோட்டங்களில் பகல் நேரங்களில் முகாமிடும் யானைகளால் இதுவரை பல விவசாயிகளும் தொழிலாளர்களும் யானைகள் தாக்கி பலியாகியுள்ளனர். விளைபயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. அவ்வப்போது குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில், தேவர்சோலை அடுத்துள்ள செம்பக்கொல்லி கிராமத்திற்குள் நுழைந்த ஒற்றை யானை அங்குள்ள காப்பித் தோட்டத்தை சுற்றி வலம் வந்தது. அந்த பகுதி விவசாயிகள் விடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடந்தனர். யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT