ஆத்தூரில் பட்ஜெட் நகல் கொளுத்தும் போராட்டம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பட்ஜெட் நகல் கொளுத்தும் போராட்டம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பட்ஜெட் நகல் கொளுத்தும் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தலைவர் பி.சண்முகம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
அப்போது ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமாருக்கும் பி.சண்முகத்திற்கும் வாக்ககுவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபடட்டனர்.
இதனையடுத்து அனைவரையும். கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். இதனால் அரைமணி நேரம் அங்கு பெரும் பதற்றம் காணப்பட்டது.