திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறையினா் நடத்திய சோதனையில் ரூ.86 லட்சத்து 13 ஆயிரத்து 912 மதிப்பிலான 1 கிலோ 516 கிராம் தங்கம் பறிமுதல் செய்தனர்.
துபை மற்றும் சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.
இதையும் படிக்க | நிலநடுக்கத்திலும் கொள்ளை; துருக்கியில் 48 பேர் கைது!
அப்போது, கணினி உதிரி பாகம், ஆம்ப்ளிஃபையர் மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்த 1 கிலோ 516 கிராம் எடையுள்ள ரூ.86.13 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக தங்கம் கடத்தி வந்த இரண்டு பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.