தமிழ்நாடு

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில்  ரூ.86  லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

DIN


திருச்சி:  திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறையினா் நடத்திய சோதனையில் ரூ.86 லட்சத்து 13 ஆயிரத்து 912 மதிப்பிலான 1 கிலோ 516 கிராம் தங்கம் பறிமுதல் செய்தனர். 

துபை மற்றும் சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது, கணினி உதிரி பாகம், ஆம்ப்ளிஃபையர் மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்த 1 கிலோ 516 கிராம்  எடையுள்ள ரூ.86.13 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனர். 

இதுதொடர்பாக தங்கம் கடத்தி வந்த இரண்டு பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நம்பிக்கையின் வானவில்...!

திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து கார் விபத்து: 3 பேர் பலி

அமித் ஷாவை பிரதமராக்கவே மோடி பிரசாரம்: கேஜரிவால் பேச்சு

வாக்குகளை அள்ளிய காங். வறுமையை ஒழிக்கவில்லை: நயாப் சைனி

அகிலேஷ் யாதவால் இந்தியா - பாக். போட்டியாக மாறிய கன்னௌஜ்!

SCROLL FOR NEXT