கோப்புப்படம் 
தமிழ்நாடு

வெளியூரிலிருந்து பகலில் சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்லும்!

வெளியூர்களில் இருந்து பகல் நேரத்தில் சென்னை வரும் அனைத்துப் பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

DIN

வெளியூர்களில் இருந்து பகல் நேரத்தில் சென்னை வரும் அனைத்துப் பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் பெரும்பாலாக பெருங்களத்தூர், மதுரவாயல் வழியாக கோயம்பேடு வந்தடையும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. 

இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக வெளியூர்களில் இருந்து பகல் நேரத்தில் சென்னை வரும் அனைத்துப் பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

இதன்படி மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு செல்லும் என்றும் இதன் மூலமாக தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் பயனடைவதுடன் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தாம்பரம் பேருந்து நிறுத்தத்திற்கு இடதுபுறமாக நிறுத்தி பயணிகளை இறக்கிவிட ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

இந்திய-அமெரிக்க ஒப்பந்தம்: பங்குச் சந்தையில் ஆரவாரம்; நிஃப்டி 639 புள்ளிகளுடனும், சென்செக்ஸ் 2,073 புள்ளிகள் உயர்வு!

SCROLL FOR NEXT