தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் 6 -ம் ஆண்டு விழா: தொண்டர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

DIN

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கமல்ஹாசன் தனது கட்சித் தொண்டர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6- ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஆரம்பித்த துடிப்புக் குறையாமல், ஐந்து ஆண்டுகளைக் கடந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். உள்ளத்தில் எரியும் அறத்தழல் ஒளி குன்றாமல் பார்த்துக்கொள்வோமாக. மநீம உறவுகள், நற்பணி இயக்க நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, கட்சியின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் விதமாக, கட்சி வளர்ச்சிப் பணியாற்ற கிராமங்களை நோக்கி நாம் செல்ல வேண்டும், நகரங்களில் மட்டுமின்றி, அனைத்து கிராமங்களிலும் நம் கட்சிக் கொடியை ஏற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT