தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு: தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

DIN

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலை இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது.

தில்லியிலிருந்து துணைத் தேர்தல் ஆணையர் நடத்தும் கூட்டத்தில் காணொலி வாயிலாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பங்கேற்கிறார். தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உள்ளிட்ட அதிகாரிகளுடன் துணை ஆணையர் அஜய் பாது ஆலோசனை நடத்தவுள்ளார்.

தேர்தல் தொடர்பான புகார்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவைக் குறித்து காணொளி மூலம் இன்று மாலை 5 மணிக்கு துணை ஆணையர் அஜய் பாது ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர், தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பரிசுப் பொருள்கள் விநியோகப்படுவது தொடர்பாக புகார்கள் வந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

ஆந்திர பேரவைத் தேர்தல்: காலையிலேயே வந்து வாக்களித்த ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு

அவிநாசி ஜவுளி கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

SCROLL FOR NEXT