கோப்புப்படம் 
தமிழ்நாடு

பழனியில் பிப். 24-ல் ரோப் கார் சேவை இயங்காது!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சேவை நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) ஒருநாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

DIN

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சேவை பிப்.24ல் (வெள்ளிக்கிழமை) ஒருநாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.

இந்த கோயிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வருவதற்காக கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சேவைகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாலை தொடங்கும் ரோப் கார் சேவை இரவுவரை செயல்படுகிறது.

இந்நிலையில், மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக ரோப் கார் சேவை நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) ஒருநாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வின்ச் எனப்படும் மின் இழுவை ரயில் மற்றும் படிவழிப் பாதையை பயன்படுத்தி பக்தர்கள் தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் கேட்டுகொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாடா மோட்டார்ஸ் ஆலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்

ஆளுநர் உரையா? அல்லது பொய் மூட்டையா? காங்கிரஸ் விமர்சனம்!

திருப்பரங்குன்றம் தர்காவில் பக்ரீத், ரமலானில் மட்டுமே தொழுகை : உச்சநீதிமன்றம்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் குவித்து ஸ்காட்லாந்து சாதனை!

சாம்சங்கில் அதிக பேட்டரி இதுதான்! கேலக்ஸி எஃப் 70இ அறிமுகம்!

SCROLL FOR NEXT