தமிழ்நாடு

லாரிகள் நேருக்கு நேர் மோதி 5 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் அருகே இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பலியாகினர்.

DIN

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் அருகே இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பலியாகினர்.

வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் பச்சாபாளையத்தைச் சேர்ந்த ஒரு நபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

அதற்கு திதி கொடுப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த உறவினர்கள் 35 பேர், ஒரு சரக்கு லாரியில் கொடுமுடி காவிரி ஆற்றுக்குச் சென்று விட்டு பச்சாபாளையம் திரும்பிக் கொண்டிருந்தனர். 

அப்போது வழியில் முத்தூர் - காங்கயம் சாலை வாலிபனங்காடு அருகே எதிரே வந்த மற்றொரு லாரியில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அவர்களைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரப்படுகிறது. வெள்ளக்கோவில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நானும் சேர்ந்துதான் திமுகவை தேர்ந்தெடுத்தேன்; ஆனால்..! -அரியலூரில் விஜய்

ஆசிய கோப்பை: இலங்கைக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்!

கமல்ஹாசனுக்கு மட்டும் ‘எக்ஸ்ட்ரா’ இசை! இளையராஜாவுக்கு ரஜினி புகழாரம்!

ஏ. ஆர். ரஹ்மான் வந்தாலும்... இளையராஜாவைப் புகழ்ந்த ரஜினி!

ஜனநாயகப் படுகொலைச் செய்யும் பாஜக! -அரியலூரில் விஜய்

SCROLL FOR NEXT